திரையுலக பிரபலங்கள் அரசியலுக்கு வருவது சகஜம்.
இது என்ன புது விடயமா என நீங்கள் கேட்கலாம்.
ஆம் புதிதல்ல!
வருவது புதிதல்ல வந்து சாதிப்பது தான் புதிது & பெரியது.
பலர் திரையுலகில் சாதிக்கும் அளவிற்கு அரசியலில் சாதிப்பதில்லை. இந்நிலையில் இருதுறையிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் தான் எம்.ஜி.ஆர் அவர்கள்.
இவரைத்தொடர்ந்து ரஜினி வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த போதும், அரசியலுக்கு வருவீர்களா எனும் கேள்விக்கு மௌனம் மட்டுமே அவருடைய பதிலாக இருந்தது இருந்து வருகிறது.
இது இப்படியிருக்க சில வருடங்களுக்கு முன்பு இளைய தளபதி 'விஜய் மக்கள் இயக்கம்' என ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் பின்னர் இவருடைய நிஜ வாழ்விலும் சரி படங்களிலும் சரி அரசியல் பார்வை இருந்து வந்தது. அரசியல் தொடர்பான வசனநடைகள் இருந்து வந்தது.
குறிப்பாக 'தலைவா' 'துப்பாக்கி' போன்ற திரைப்படங்களுக்கு பல தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இப்பிரச்சினையானது சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டிருந்த போதிலும் இவருக்கு தமிழக அரசினாலும் அரசின் முதல்வரினாலும் ஏற்பட்ட பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
இப்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர் 'நான் எப்போதும் சத்தமில்லாமல் மக்களுக்கு உதவி செய்து வருகிறேன், எனவும் இன்னும் இன்னும் எதிர்காலத்தில் உதவி செய்வேன்' என்றும் கூறியுள்ளார்.
இந்த பதில் இவர் அரசிலுக்கு வருவது தொடர்பில் சூசகமாக உள்ளது என சினி வட்டாரம் தெரிவிக்கின்றது.
விஜய்ணா மீண்டுமா என்று தளபதி ரசிகர்கள் அங்கலாய்ப்பார்களே...