அவ்வாறு மரண பயம் கொண்டவர்கள் நிச்சயம் இதனைப் படியுங்கள்.
சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.
ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறையினரின் அதிபதியும் செவ்வாய் ஆகும்.
அத்துடன் சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இவரை வணங்கி வருபவர்களுக்கு, மரண பயம் வராது என கூறப்படுகிறது.
மேலும் புற்று நோய் போன்ற கொடிய நோய் உடையவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால், நோய் நீங்கி மரணபயம் தீரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.