சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளன.
இது குறித்து திரையுலகின் பல பிரபலங்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளைப் புரியும் நபர்களுக்கு, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென நடிகை சமந்தா கூறியுள்ளார்.
இத்தகைய கோரச் செயல்களை புரிகின்றவர்கள், இந்த உலகில் வாழ தகுதி அற்றவர்கள் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.