பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.
கிருலபனை - லலித் அத்துலத் முதலி விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவான தரப்பினர் இந்த விளையாட்டு மைதானத்திலேயே தங்களின் மேதின கூட்டத்தை நடத்தி இருந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து அமைச்சர் கபீர் ஹசீம் அவரை நேற்று இரவு வைத்தியசாலையில் சென்று சந்தித்திருந்தார்.