பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாகியது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவித்திரிக்கு ஜெமினி கணேசன் திடீரென தாலி கட்டுவது, சாவித்திரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சாவித்திரியையும் மதுவுக்கு தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்று பல காட்சிகளை படத்தில் உள்ளன.
இதனை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.