இந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் சான்பெங்க் என்ற கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சிக் கூடத்தில், பல்வேறு உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இங்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தனது குழந்தைக்கு திமிங்கலம் முத்தமிட வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து காட்சிக் கூடத்தின் உதவியாளர் ஒருவர், பெலுகா என்ற திமிங்கலத்தை குழந்தைக்கு முத்தமிட வைத்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்தக் குழந்தை, பயத்தில் அழுது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.