இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணை, 12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரால் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கும் அவரது முதலாளிக்கும் ஏற்பட்ட முரண்பாடே, குறித்த கொலைக்கான காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.