பிரேசிலில் உள்ள தீவு ஒன்றில் பெண்குழந்தை பிறந்த சந்தோசத்தை அந்த தீவிலுள்ளவர்கள் மகிழ்ச்சி பிரவாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்
பெண்குழந்தை பிறந்ததில் என்ன அதிசயம் இருக்கப்போகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இவர்களது சந்தோசத்திற்கு ஒரு அழகிய காரணம் இருக்கிறது.
பிரேசிலில் அதிகளவிலான சுற்றிலா பயணிகளை கவர்ந்த ஒரு தீவில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
பல ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத குறித்த தீவில்,
குழந்தைப் பிறப்பு பற்றிய தகவல் தெரியாத 22 வயதுடைய பெண் ஒருவர், கழிப்பறையில் குழந்தை பெற்று தனது குழந்தையை என்ன ஏது என்று அறியாது அலறியுள்ளார்.
பின்னர் ஏனையவர்கள் விடயம் அறிந்து குழந்தை ஒன்றை அவர் பிரசவித்துள்ளார் என்பதை அனைவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் அந்த தீவில் உள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இந்த சந்தோசத்தை கொண்டாடி வருகின்றனர்.
குறித்த தீவில் அழகிய கடற்கரையும், வனப்பகுதியும் காணப்படுவதனால் ஆயிரக்கணக்ககான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த தீவில் சுமார்
3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த தீவு சிறியது என்பதால் தீவின் இயற்கை அழகை மாறாது பேண அங்கு மக்கள்தொகை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேசில் அரசு, அங்கு குழந்தை பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில் குழந்தை எப்படி பிறக்கும் என்ற தகவல் தனக்குத் தெரியாத நிலையிலேயே தான் தற்போது குழந்தை
பெற்றுள்ளேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரேசில் அரசுசின் கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த பெண் அவரின் கணவர் மற்றும் அவரின் குழந்தை தொடர்பான எந்த தகவல்களும் வெளிப்படுத்தவில்லை.