இந்தியாவின் கோயம்பத்தூரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் பணிப்பெண்ணாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் காவலர் ஒருவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குறித்த பெண்ணை உறவுக்கு அழைத்துள்ளார்.
எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, காவலர் கொடூரமாக கொலை செய்து அவரது சடலத்தை சாக்கு மூட்டையில் வைத்துள்ளார்.
பின்னர் குறித்த சடலத்தை அப்பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொலை செய்தவரை கைது செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.