இந்திய கிரிக்கட் அணி வீரர் ரவீந்த்ர ஜடேஜா, தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இவரது மனைவியை, காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்த்ர ஜடேஜாவின் மனைவி ரிவா சோலங்கி, தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் அருகில் வந்த காவல்துறை அதிகாரியின் வாகனத்தில் மோதியுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறை அதிகாரி ஆத்திரமடைந்து ரிவா சோலங்கியின் தலைமுடியை பிடித்து இழுத்து, மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.