இவ்வாறு இரவு நேரத்தில் கண்விழித்து வேலை செய்கின்றவர்களுக்கு அதிக அளவு நோய்கள் ஏற்படும் என அந்த புதிய ஆய்வின் அறிக்கையின்படி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின்படி, இரவில் வேலைப்பார்க்கும் போது ரத்தத்தில் உள்ள புரோட்டின் அதிகரிக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. இதனால் எளிதாக நோய்கள் ஏற்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மற்றவர்களை விட இரவுப் பணியில் ஈடுபடுவர்களை அதிகமாக பாதிக்கிறது.
இந்த ஆய்வில் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரோட்டின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது இரவில் வேலைப்பார்ப்பவர்கள் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இரவு நேர பணியாளர்கள் பின்பற்றவேண்டிய முக்கியமான சில குறிப்புக்கள் ........இதோ உங்களுக்காக !!!
இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் டிவி பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் டீ மற்றும் தேநீர் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் பால் சாப்பிடலாம்.
இந்த பானங்களை அருந்தி சில நிமிடங்கள் ஆனா பின்னர் எளிதில் செமிபாடடையக்கூடிய இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
காலை உணவை முடித்ததும் ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்த பின்னர் தூங்கச் செல்ல வேண்டும்.
படுக்கை அறையில் கண்டிப்பாக இருட்டு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். கதவு ஜன்னல்களை இறுக்கமாக மூடிவிட வேண்டும். இருளில்தான் டோபமைன் என்ற ஹார்மோன் சுரந்து ஆழ்நிலை தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
தூங்கும்போது கண்டிப்பாக Samrt phone ஐ அருகில் வைக்க வேண்டாம். அதில் இருந்து வெளிவரும் ரேடியேஷன் உடலுக்குள் பாய்ந்து தூக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டது.
தூங்குவதற்கு முன்னர் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பதோடு உடல்நலனும் பாதுகாக்கப்படும்.
பணி நாட்களில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. விடுமுறை தினங்களில் அசைவ உணவை சாப்பிட்டு கொள்ளலாம்.