தூங்கும்போது பாம்பு கடித்தது தெரியாமல், அழுத குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் மாநிலத்தில் சம்பவித்துள்ளது
உத்தரப்பிரதேஷ்ன், மண்டலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தாய் ஒருவர், அவரின் இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த வேளையில், குழந்தையின் தாயாரை விஷப் பாம்பொன்று தீண்டியுள்ளது. பாம்பு தீண்டியதை அறியாத அந்த தாயார், குழந்தை பசியில் பாலுக்காக அழுததும் அவர் பாலூட்டியுள்ளார்.
ஆனால், சிறிது நேரத்தில் இருவரும் உயிருக்கு போராடவே, அவர்களை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குறித்த குழந்தையின் தாயார் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து சிகிச்சை பலன்அளிக்காமல் குழந்தையும் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.