தனது காதலியின் மீது கோபமுற்ற நபர், அவரைக் கொலை செய்து பொதியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தாய்வானில் பதிவாகியுள்ளது.
இதன்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலம், 7 துண்டுகளாக வெட்டப்பட்டு, பொதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.