மாம்பழம் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது..மாம்பழத்தில் பல வகையான வகைகள் உள்ளன.இது எவ்வகையான மாம்பழம் என மாம்பழ சுவைகளை வைத்தே கண்டறியலாம்.
நகர வாழ்க்கையை பொறுத்தவரையில் மாமரங்கள் காண்பதரிது.அதனால் மரத்தில் இருந்து நேரடியாக நாம் மாம்பழங்கள் எடுத்து உண்பதில்லை..நம்மைப்பொறுத்தவரையில் பழக்கடைகளில் பெரிய கடைகளில் மட்டுமே மாம்பழங்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
நல்ல சத்துக்கள் கொண்ட மாம்பழம் இப்போதெல்லாம் நமக்கு மரத்திலிருந்து பழுத்து கிடைப்பதில்லை.இவை இயற்கையாக பழுத்தவையா?அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என எவ்வாறு கண்டறிவதென பார்க்கலாம்.
செயற்கையாக மாம்பழத்தை பழுக்க வைப்பதற்காக கல்சியம் கார்பைடு, பொஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ரசாயனங்கள் முலமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் வழமையாக இருக்கும் சத்துக்கள் சுவை பாதிக்கப்பட்டு மாறுபடும்.
*செயற்கையாக பழுக்கப்பட்ட பழங்கள் அதிக பளபளப்பாக இருக்கும்.
*மரத்திலிருந்து பழுத்த பழங்கள் எப்போதும் கொஞ்சம் கொழகொழப்பாக இருக்கும்.செயற்கையானவை அப்படி இருக்காது.
*இயற்கையாக பழுத்தவை முறையாக ஒரே மாம்பழ வடிவில் இருக்காது.
*ரசாயனங்கள் மூலம் செயற்கையாக பழுத்தவை திட்டு திட்டாக பழுத்திருக்கும்.
* இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமல்லாமல், சற்று இளஞ் சிவப்பு நிறத்தோடு காணப்படும்.
* மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கண்டிப்பாக கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது.
* இயற்கையில் காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். பழம் காம்பை நோக்கித்தான் பழுத்துக்கொண்டு செல்லும். செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவை அப்படி இருக்காது.