சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவில் பெண் ஒருவர், சுட்டெரிக்கும் வெயிலில் கார் ஒன்றின் மீது மீன்களை அடுக்கி வைத்து மீன்களை பொரித்த சம்பவம் சுவார்ஸ்யமாக பேசப்பட்டு வருகிறது.
குறித்த பெண், மீன்கள் சிலவற்றைக் காரில் வைத்து பொரிக்கும் காட்சிகள் புகைப்படங்களாக தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றன.
இது போன்று பல இடங்களில் சீன மக்கள் வெயிலில் சமைக்கும் புகைப்படங்கள் உலவி வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பெண் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மீன்களை சமைத்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.