வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் ''Rumble in the Jungle '' சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ளவே குறித்த வீரர் இலங்கை வந்துள்ளார்.
இந்த நிலையில் மஹியங்கனை பகுதியில் பாயும் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில், குறித்த சைக்கிள் ஓட்ட வீரர் காணமற்போயுள்ளார்.
காணமற்போன சைக்கிள் ஓட்ட வீரரை காவற்துறையினருடன் அப்பகுதி மக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.
ஜூன் மாதம் 9 ம் திகதி ஆரம்பமான Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டி, எதிர்வரும் 15 ம் திகதி வரை மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.