தண்ணீர் குடிப்பதிலும் இப்பொழுது பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது.எவ்வளவு குடிப்பது எவ்வாறு குடிப்பது எப்படி குடிப்பதென்று பல கேள்விகள்...எப்போதுமே நாம் நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும் போது ,குடிக்கும் நீரானது அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும்.இதனால் சில பாதிப்புக்கள் நாளடைவில் ஏற்பட வாய்ப்புண்டு.
நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் அடிவயிறு மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பகுதியுடன் செரிமானப் பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
எப்போதுமே அதிக குளிர்ந்த மற்றும் அதிக சூடான நீரைப் பருகக்கூடாது.இப்படி பருகுவதால் கூட வயிற்று பகுதியில் பிரச்சனை ஏற்படலாம்.
நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்க வாய்ப்புண்டு.
தொடர்ச்சியாக நின்று கொண்டே நீர் குடித்தால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
நின்று கொண்டு தண்ணீரை பருகும்போது அதிக அழுத்தம் கொண்ட நீரோட்டம் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கு குறிப்பிட்ட நேரம் வரை சீரற்றதன்மையை உருவாக்கும்.
அதனால் நீர் குடிக்கும் போது எப்போதும் அமர்ந்து நீர் குடிக்க வேண்டும்.அது நமக்கு ஏற்படவுள்ள அதிக பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.