இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்துகொண்ட போது, குதிரை தூக்கி வீசியதில் பலத்த காயங்களுக்கு இலக்காகினார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அழிக்கப்பட்டும், அது பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்துள்ளதாக ஜெர்மன் அரச குடும்பம் அறிவித்துள்ளது.
இளவரசர் ஜார்ஜ்க்கு தற்போது 41 வயது.
இவர் இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை காதலித்து, கடந்த 2015-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஜேர்மனை விட்டு வெளியேறிய அவர் இங்கிலாந்தில் குடியேறினார்.
இந்த நிலையில், தற்போது குதிரை பந்தய போட்டில் கலந்து கொண்ட அவர், குதிரை தூக்கி வீசியதில் காயங்களுக்கு இலக்காகி, மருத்துவம் பலனின்றி மரணம் அடைந்தமை அரச குடும்பத்தை அதிர வைத்துள்ளது.