வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரை தாக்கி, அவரது கால்களை உடைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் திருச்சியில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண்ணை தாக்கிய கொள்ளையர்கள், அவரது தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது தாக்கத்தை எதிர்கொண்ட பெண்ணுக்கு, கால்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.