உலகத்தில் முதன் முதலாக செய்தி வாசிக்கும் ரோபோக்களை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்
ஜப்பானில் உள்ள இஷ்கியுரோ என்ற விஞ்ஞானி தனது குழுவினருடன் சேர்ந்து உருவாக்கி அந்த ரோபோக்களை செய்திகளை வாசிக்க வைத்துள்ளார்.
இந்த ரோபோவுக்குள் செய்திகள், தரவுகளை ஏற்கனவே பதிவு செய்துவிடுவார்களாம் பின்னர் அவை தானாகவே செய்தி வாசிக்க ஆரம்பித்துவிடும். தெளிவான உச்சரிப்புடன், முகபாவனையுடன் ஒரு பெண் செய்தி வாசிப்பது போல் வாசித்து அசத்துகின்றது இந்த ரோபோக்கள.
இந்த செய்தி வாசிக்கும் ரோபோக்கள் இரண்டு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தை ரோபோ ரோபோ இது மழழை மொழியில் செய்தி வாசிக்கும். வயது வந்தவர்கள் ரோபோ என்பது இன்னுமொரு வகை.
இது குறித்து இந்த ரோபோவினை தயாரித்த இஷ்கியுரோ கூறுகையில் எதிர்காலத்தில் இன்னும் புத்திக்கூர்மையான ரோபோக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
இந்த செய்தி வாசிக்கும் ரோபோக்கள் தற்பொழுது தலைநகர் டோக்கியோவில் உள்ள அருங்காட்சியத்தில் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரோபோ செய்திகள் வாசிக்கும் அதிசயக் காணொளியை
இங்கே காணுங்கள்