இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இந்திய பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற, சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர் திடீரென மரணமடைந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ரீதியாக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் யோகவிற்று முன்னுரிமை அளிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
குறித்த யோகா நிகழ்ச்சியில் சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் முதியவர்கள் என சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.
இதில் பங்கேற்ற, 73 வயதான மூதாட்டி ஒருவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலென்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார்.
இந்த தகவலை அந்த பிரதேச காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், குறித்த மரணம் தொடர்பில் விசாரணங்கள் இடம்பெற்று வருவதாகவும் காவற்துறையினர் கூறுகின்றனர்.