சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் குருகிராம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பட்டோடி பகுதியில் சிறுமியை இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அசசிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
டுண்டஹெர பகுதியில் 11ம் வகுப்பு மாணவியை கோபால் என்ற நபர் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து பலாத்காரம் தொடர்பாக யாரிடமும் செல்லக்கூடாது என்று மாணவிக்கு கோபால் மிரட்டல் விட்டபோதும் அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கோபாலை தற்போது போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காடா பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரை ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு பாலியல் சம்பவங்கள் நகரில் நடைபெற்றுள்ளன.