சென்னையில் தனது காதலன் இறந்த துக்கத்தில்,அவரது காதலி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விருவரும் Facebook மூலமாக பழகி ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்த அவரது காதலருக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இதனால் மன வேதனையில் இருந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அடுத்து குறித்த பெண்ணின் உடலத்தையும், அவரது காதலரின் உடலத்தையும் காவல்துறையினர் மீட்டதுடன்,மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.