ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள வைத்தியசாலையில் தாதியாக வேலை செய்துவந்த அய்யூமி குபோகி என்பவர்
2016-ம் ஆண்டு வரை அந்தவைத்தியசாலையில் வேலை செய்துவந்தவர் திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.
அவர் தாதியாக பணியாற்றிய போது, 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோசில் விஷத்தை கலந்து செலுத்தி அவரை கொன்றது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரித்தார்கள். அது உண்மை என்று தெரிய வந்தது. மேலும் விசாரித்ததில் அவர் இதுவரை 20 நோயாளிகளை இவ்வாறு மருந்தில் விஷம் கலந்து கொன்றதாக கூறினார்.
அதிகம் தொல்லை கொடுக்கும் நோயாளிகளை இவ்வாறு கொன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.