இந்த சம்பவம் கோவையில் பதிவாகியுள்ளது.
குறித்த மாணவியின் மரணத்திற்கு அவரது பயிற்சியாளரே காரணம் என கூறப்படுகிறது.
மாடிக்குக் கீழே வலையொன்று வைக்கப்பட்டு அந்த வலையில் விழும் படியான பயிற்சி ஒன்று, குறித்த மாணவிக்கு வழங்கப்பட்டது.
இதன் போது குறித்த மாணவி வலையில் விழாமல், தரையில் விழுந்துள்ளார்.
இதனை அடுத்து மாணவியின் தலையில் பலமாக அடிபட்டுள்ளது.
இதனால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி பரிதாமாக பலியானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் குறித்த மாணவியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.