உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் உக்ரைன் நாட்டில் இருப்பதாக அடித்து கூறுகிறார்கள். நம்ப முடியலையா ? தொடர்ந்தும் படியுங்கள். அசந்து போவீங்க !!!
உக்ரைன் நாட்டில் டோப்ரஸ்லாவ் என்ற கிராமத்தில் வசிக்கும் 87 வயது பாவெல் செமன்யுக் என்பவரின் குடும்பம்தான் இந்தப் பெருமைக்குரிய குடும்பம்.
அடேங்கப்பா என்று வாய்பிளக்கும் அளவுக்கு பாவெல் செமன்யுக்கு 13 பிள்ளைகள்இ 127 பேரன் மற்றும் பேத்திகள்இ
203 கொள்ளுப் பேரன் மற்றும் கொள்ளுப் பேத்திகள். 3 எள்ளுப் பேரன் மற்றும் பேத்திகள் என மொத்தம் 346 அங்கத்தவர்கள் இந்தக் குடும்பத்தில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.
கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் இவர்கள் குறித்த கிராமத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். குடும்பத்தில் உள்ள அனைவர் பெயர்களையும் நினைவில் வைத்திருக்கும் இவர்கள்இ மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை என்று கூறுகிறார்கள்.
நல்ல நாள் பெருநாள் பிறந்தநாள்இ திருமண நாள் போன்ற குடும்பத்தில் கொண்டாடப்படும் மகிழ்வான நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடுவதால் சுமார் ஒரு வருட காலத்திற்கு அந்த கொண்டாட்டங்கள் நீடிப்பதாக கூறுகின்றனர்.
இந்த மாதிரியான கொண்டாட்ங்களின் போது, பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுகள் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சுவாரஸ்யமாக கூறும் இவர்கள் தமது குடும்பத்தில் இருந்து 30 குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவர்கள் கூறுகையில்இ சமீபத்தில் தான் உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது கின்னஸுக்கும் விண்ணப்பித்திருக்கிறோம் என்று ஆர்வத்துடன் தமது ஆசையை வெளிப்படுத்துகிறார்கள்.
தற்போது தற்போது Guinness World Record ல் 192 பேர் அடங்கிய இந்தியக் குடும்பம் உலகின் மிகப் பெரிய குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது. இந்த நிலையில் பாவெல் செமன்யுக்ன் குடும்பம் இந்த சாதனையை அசால்ட்டா முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை.