இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் காதலி திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து சடலமாகக் கிடந்த தனது காதலியை திருமணம் செய்ய காதலன் முடிவெடுத்தார்.
அதனையடுத்து, சவப்பெட்டியில் சிவப்பு நிற புத்தாடை உடுத்தப்பட்டு காதலி படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
மணமகன் வெள்ளை நிற ஆடையில் இருந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சடலமாக கிடந்த காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது காதலன் நெகிழ்ச்சியுடன் ''எழுந்து வா காதலியே'' என கூறியது, அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.