இதன்போது பயணிகள் அனைவரும் உடனடியாக தொடரூந்தில் இருந்து கீழே இறங்கினர்.
எனினும் அந்த தொடரூந்தில் இருந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர், இறங்க முடியாமல் தவித்துள்ளார்.
இதனைக் கண்ட காவல்துறை அதிகாரி ஒருவர், கீழே படுத்து,குறித்த கர்ப்பிணிக்கு படியாக மாறியுள்ளார்.
பின்னர் குறித்த கர்ப்பிணி காவல்துறை அதிகாரியின் முதுகில் ஏறி பாதுகாப்பாக கீழே இறங்கியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை நெகிழ வைத்துள்ளது.
அத்துடன் கர்ப்பிணிக்கு உதவிய காவல்துறை அதிகாரி, பதவி உயர்வும் பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.