தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியின் பூதவுடலை, சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது என தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூதவுடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து முன்னாள் முதல்வர், அமரர் கருணாநிதியின் தொண்டர்கள் பலர், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.