இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் பதிவாகியுள்ளது.
குறித்த மந்திரவாதியிடம் சிக்கிய சிறுமியொருவர், இவ்வாறு 15 வருடங்களாக கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் தரிக்காமல் இருக்க குறித்த மந்திரவாதி, பலவந்தமாக கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது குறித்த மந்திரவாதியின் பிடியில் இருந்த, 28 வயதான பெண் மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபரான மந்திரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை, அந்த நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.