கலைஞர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றில் முதன் முறையாக நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் கலைஞர் மு .கருணாநிதிக்காக முதல் தடவை பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டத்தில்லை.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தவருக்கும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. மறைந்தவர் அவையின் உறுப்பினராக இருந்தால் மட்டுமே அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் முதன் முதலாக கலைஞர் கருணாநிதிக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பான வரலாற்று பதிவாக கருதப்படுகிறது.