வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ''மாநாடு'' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு வில்லனாக நடிக்கவுள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். இது சிம்பு நடிக்கும் முதலாவது அரசியல் படம் ஆகும்.
சிம்பு நடிப்பில் ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 28-ம் திகதி வெளிவர இருக்கிறது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் படம் என்பதால், சிம்புவின் ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய ''மங்காத்தா'' படத்தில் அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது போன்றே சிம்புவும் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ சிம்புவின் அந்த வில்லன் பாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.