கோபம் என்பது எம் உணர்வுகளில் ஒன்று.பெரியவர்கள் சிறியவர்கள் என்று பாராது கோபம் அனைவர்க்கும் ஏற்படுவதுண்டு..இருப்பினும் இந்த குழந்தைகளின் கோபம் சற்று வித்தியாசமானது.அந்த கோபத்தை எப்படி கையாள்வது என பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு முதலில் கோபம் வர காரணம் அவர்களின் தேவை நிறைவேற்றப்படாத போது கோபம் எழுகின்றது அவர்களுள்ளே..
குழந்தைகள் ஏதாச்சும் பொருட்கள் கேட்டு வாங்கிக்கொடுக்காத சந்தர்ப்பத்தில் அவர்கள் கோபம் கொண்டு அழ ஆரம்பிக்கின்றார்கள்.கோபம் அதிகமாகும் போது ஏதாச்சும் பொருட்களை தூக்கி வீசுவார்கள் அல்லது உடைப்பார்கள்.இந்த சந்தர்ப்பத்தில் இடை நடுவே நாம் அவர்களை அடிக்காமல் அமைதியாய் இருந்து அவர்கள் கோபம் கொஞ்சம் குறைந்தவுடன் அருகில் சென்று அவர்களை பாசமாக அன்பாக அணுகவேண்டும்.அத்தோடு அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.
குழந்தைகள் கோபம் கொண்டு சில செய்கைகளை செய்யும் போது அவர்களை வன்மையாக கடுமையான வார்த்தைகள் பேசி கண்டிக்க கூடாது.அத்தோடு அவர்களை கோபம் கொள்ளும்போது அடித்து துன்புறுத்தக்கூடாது.அவ்வாறு செய்தால் உங்கள் மேல் கொண்ட அன்பும் நம்பிக்கைத்தன்மையும் நீங்கள் இழக்கவேண்டியிருக்கும்.
குழந்தைகள் கோபம் தணிந்து அமைதி நிலைக்கு திரும்பியவுடன் அவர்கள் கோபம் கொள்ள காரணமாயிருந்த சம்பவம் பற்றி அதிகமாக பேசுங்கள்.குறை நிறைகள் பற்றி விளக்கம் கூறுங்கள்.
கோபம் கொள்ளும் போது அதனை எவ்வாறு கையாள்வது என்ற பழக்கத்தை உங்கள் மூலமாக உங்கள் குழந்தைகள் பழக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயற்படுங்கள்.காரணம் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைவது உங்கள் கையில்தான் உள்ளது.
அதிக கோபம் ஒரு மனிதனை நிலை குலைத்து இடம் தெரியாமல் அழித்து விடும் என்பது நாம் அறிந்ததே...
அரவணைப்பு அன்பு சமாளித்தல் போன்ற பழக்கங்கள் உங்கள் மூலம் உங்கள் குழந்தைகள் பழகிக்கொள்ளட்டும்.