கடந்த வாரம் பொன்னம்பலம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், 60 நாட்களாகியும் இன்னும் வைல் காட் என்ட்ரியில் புதிதாக யாரும் இன்னும் உள்ளே வரவில்லை.
முதலாவது பிக் பொஸ் நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண், பிந்து மாதவி ஆகியோர் வைல் காட் என்ட்ரியில் வந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை வைல் காட் என்ட்ரியில் வாய்ப்பை இழந்து தவிக்கும் பிரபல இளம் நடிகர் மற்றும் சர்ச்சைகள் பலவற்றுக்குள் சிக்கிய அழகிய இளம் நடிகையான ஸ்ரீ ரெட்டி ஆகியோர் உள்ளே வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது குறித்த தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு இல்லை என்பதோடு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் ஓர் செய்தியாகும்.
எனினும் உள்ளே வரப்போகும் அந்த பிரபல நடிகர் யார் என்பது பற்றி அறிய மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.