ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது .அரசியல் சார்ந்த காமெடி .அதோடு பயணிக்கும் விறு விறுப்பான திரைக்கதை . ரஜினி வயதுக்கு தகுந்த தோற்றத்தோடு தோன்ற இருக்கிறாராம் .இதுதான் இப்போதைக்கு சூடான செய்தி.
ரஜினி எப்போதும் கதையையும் இயக்குனரையும் தெரிவு செய்வதில் புத்திசாலிதான் . ஆனால் அண்மைய சில சரிவுகள் ரஜினியை சற்று பயமுறுத்தியிருக்கிறது .பழைய தன்னுடைய வித்தைகள் எதுவும் இனி எடுபடாது என்பதைப்புரிந்து கொண்ட ரஜினி புதிய ஒரு கதை யாதார்த்ததோடு பயணிக்கும் திரைக்கதை ஒன்றை தெரிவு செய்திருக்கிறாராம் . இப்பிடி ஒரு கதையை ரஜினியின் மகள் சவுந்தர்யாவிடம் ரஞ்சித் சொல்ல அந்த கதை ரஜினியின் காதுகளுக்கு போய் இருக்கிறது .
இந்த படம் முடிந்த பிறகே ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்ட படம் ஒன்றில் ரஜினி நடிக்கவுள்ளாராம். வெற்றி பெற்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை தக்கவைத்துகொண்டிருந்த ரஜினி தற்பொழுது ஒரு இளம் இயக்குனரின் கதையை தெரிவு செய்திருக்கிறார் என்றால் அதில் விஷயம் இல்லாமல் இருக்காது என்பது கோடம்பாக்கத்தின் கிசு கிசு .
கந்தப்பன் பிரஷாந்த்