இதனால் ஹீரோக்கள் இல்லாத கதைகளை அவருக்காகவே தயார் செய்கின்றனர் இயக்குனர்கள். கடந்த வருடம் வெளிவந்த அறம் படத்துக்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் எகிறியுள்ளது.
கோலமாவு கோகிலா படத்திலும் ஹீரோ இல்லாமல் நயன்தாராவை மட்டுமே முன்னிலை படுத்தி வருகின்றனர். நாளை வெளிவரவுள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் நாளை காலை திரைப்படவுள்ளது.
தற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் படங்களிலும் நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அஜித் ஜோடியாக விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார்,
சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த நயன்தாரா இப்போது தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லையாம்.