ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில், 48 மாணவர்கள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.
பலியான அனைத்து சிறுவர்களும் உடல் சிதறி பரிதாபமாக பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் தாஷ்த்-இ-பார்ச்சி என்ற இடத்தில் உள்ள பள்ளியிலேயே, குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால், பலியான மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.