நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்கிறார்.
இருந்தாலும் தெலுங்கு, கன்னடம் படங்களில் ஓரிரு பாடல்களில் நடனமாடி வருகிறார். அதே வேளையில் நடிப்பதற்கு இணையாக நடனமாட சம்பளம் வாங்கி வந்தார். இதுகுறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கொடுத்த பதில் இதோ...
''நான் சினிமாத்துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. முன்னணி நடிகையான நான் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடுவது ஏன் என கேட்பதோடு, அப்படி ஆடாதீர்கள் என சொல்கிறார்கள். பிரபல நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது கதாநாயகிக்கான முக்கியத்துவம் குறைகிறது. இதனால் நடிகைகள் தங்கள் திறமைகளை காட்டுவது சிரமம். நடிப்பு மட்டும் போதாது. நான் இந்த நிலைக்கு உயர நடனமும் ஒரு காரணம். அதனால் தான் நடன வாய்ப்பை மறுப்பதில்லை'' என தமன்னா கூறியுள்ளார்.