பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
அங்கு ஜனாதிபதி மம்னூன் உசேன், இம்ரான்கானுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது இம்ரான்கான் பதற்றத்துடன் காணப்பட்டார்.
மேலும், கண்ணீருடன் தமது உறுதிமொழியை எடுத்துக் கொண்ட அவர், உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் திணறினார்.
அதன் பின்னர் தான் கூறிய வார்த்தை தவறானது என்பதை அறிந்த இம்ரான்கான், மன்னிப்பு கூறி சமாளித்தார்.