கேரள மாநிலத்தின் கொச்சி பகுதியை சேர்ந்த சித்திக் மல்லாசரி மற்றும் பாத்திமா என்ற தம்பதிகளின் குழந்தைகளான ஹாரன் மற்றும் தியா ஆகிய சகோதர சகோதரிகள், தாங்கள் படிப்பதற்காக டேபிள் வாங்க உண்டியலில் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளனர்.
தற்போது 2210 ரூபாய் சேர்ந்துள்ளன நிலையில் குறித்த இரு சிறுவர்களும் அந்தப் பணத்தை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியாக வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் கேரள வெள்ள நிவாரண முகாமின் குழுவினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தொகை மிகப்பெரிய தொகை இல்லை எனினும், இரண்டு குழந்தைகளின் மனங்களை மதிப்பிட , எத்தனை கோடி கொடுத்தாலும் முடியாது.
உலகில் இன்னும் மனிதத் தன்மை உயிருடன் உள்ளது என்பதற்கு, இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவை இல்லை என்பதே உண்மை.