செல்ஃபீ படம் எடுக்கும் ஆசையால் 4 வயது குழந்தை பலியாகிய சம்பவம் ஒன்று, இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்த அனர்த்தம் காவிரி ஆற்றில் நிகழ்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.
மிக நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு தண்ணீர் பெருக்கெடுப்பதை பலரும் ஆர்வத்தோடு பார்த்து, புகைப்படங்களை எடுத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் மோகனூர் அருகே பாயும் காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்று செல்ஃபீ எடுத்துள்ளனர்.
இந்த புகைப்பட எடுத்தலின் போது, அங்கிருந்த 24வது தூண் மேல், தனது 4 வயது ஆண் குழந்தையை அமரவைத்து செல்ஃபீ எடுக்க முயன்றுள்ளார்.
இதன்போது யாரும் எதிர்பாரத நிலையில், அந்த 4 வயது குழந்தை காவிரியில் விழுந்ததும் வெள்ள நீரில் குழந்தை அடித்துச் செல்லப்பட்டது.
பெற்றோர்கள் அலறி ஆர்ப்பாட்டம் செய்தும், குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை. தொடர்ந்தும் குழந்தையின் உடலை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈட்டுபட்டு வருகின்றனர்.