2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறைகள், திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப்பிரதேசத்தில் 43 இற்கு மேட்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை 2000 ஆண்டுகள் பழமையானவை.
யான் ஓயா நீரை திசை திருப்பும் திட்ட நடவடிக்கையின் போதே இக்கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அதே பிரதேசத்தில் பல தொல்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டு பிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை அங்கிருந்து அகழ்ந்தெடுத்து யான் ஓயா அணைக்கட்டின் அருகில் மக்கள் பார்வைக்காக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாகவும் அறிய முடிகிறது.
அத்துடன் யான் ஓயா நீரை திசை திருப்பும் திட்டத்தில் கல்லறைப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.