இந்த சம்பவம் மொராக்கோவில் பதிவாகியுள்ளது.
மொராக்கோவைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்ற குழு ஒன்று அவருக்கு பச்சைக் குத்தி சித்தரவதை செய்துள்ளது.
குறித்த இளம்பெண்ணை 13 பேர் கொண்ட குழுவினர் கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததோடு, அப்பெண்ணின் உடல் முழுவதும் பச்சைக் குத்தி சித்தரவதை செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்கள் மிக மோசமான வார்த்தைகளைக் கொண்டு அந்த பெண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் பச்சைக் குத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பெண்ணை அந்த கும்பல் விடுவித்த போதுதான் வெளியே தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த நபர்களைக் கைது செய்ய, அந்த நாட்டு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.