ஒரு காலத்தில், நம்ம தமிழ் இரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் வளம் வந்தவர் நடிகை அசின். இவருக்கென்று கோடி கொடியாக இரசிகர்கள் இருந்தார்கள். பல படங்களில் வரிசை கட்டி, முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த பெருமையும் இவருக்குண்டு.
பின்னர், ஹிந்திப் படவுலகம் சிவப்புக் கம்பளம் விரிக்க, அங்கும் தனது அத்திபாரத்தை இட்டார். நல்ல படங்கள் கிடைத்தன. ஆனாலும், ஏனோ தொடர்ந்து அவ்வாறான பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பது கவலை.
இன்று இன்னுமோர் கவலை தரும் விஷயம் நடந்தேறியுள்ளது. அதாவது, மும்பை விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் அவரது காரை அசின் நிறுத்தியுள்ளார். அதனை கண்ணுற்ற காவல்துறை காரை பறிமுதல் செய்துள்ளார்கள். இதனால், வேதனையடைந்த அசின், மன்னிப்புக் கோரியதையடுத்து கார் மீளவும் வழங்கப்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு நல்ல உதாரணம் எனலாம்.
-கோடம்பாக்கக் குருவி-