மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் உடல்நலக் குறைவுக் காரணமாகவே இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாளு அம்மாள் ஏற்கெனவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது தயாளு அம்மாளின் உடல் நிலை, சீராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.