இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா ஒரு பேட்டியில் பேசும்போது "அஜித் ரசிகர்கள் என் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
அஜித் அல்லது விஜய் - இரண்டு கதாநாயகர்களிடம் இருந்து வாய்ப்பு வந்தால் யாருடன் நடிப்பீர்கள்? என கேட்டதற்கு, "ஏன் இப்படி ஒரு கேள்வி. ஏற்கனவே அஜித் ரசிகர்கள் என் மீது எரிச்சலில் இருக்கிறார்கள்" என கூறி, அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
விஜய்க்கு ஜோடியாக மூன்று படங்களில் சமந்தா நடித்துள்ளார். அப்போது அஜித் ரசிகர்களிடம் இருந்து வந்த விமர்சனங்கள் பற்றித் சமந்தா கருத்து வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும் விஜய்யின் அடுத்த படத்தில், அவர் தான் கதாநாயகி எனப் பரவும் தகவல்கள், உண்மையில்லை எனவும் சமந்தா கூறியுள்ளார்.