பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கானின் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சி, ஆட்சியை கைப்பற்றியது.
அங்கு புதிய தகவல் துறை மந்திரியாக பயாஸ்- உல்-ஹசன் சோகன் நியமிக்கப்பட்டார். பயாஸ்- உல்-ஹசன் சோகன் பதவி ஏற்றதன் பின்னர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்களை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி செயற்படும் பட்சத்தில் முதலில் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறினால், அந்த தியேட்டர் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மனிதாபிமானமற்ற முறையில் ஒரு பெண்ணின் அரை நிர்வாண போஸ்டரை எப்படி வைக்கிறார்கள் என தெரியவில்லை. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இவரது இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெருமளவு ஆதரவு கிடைத்த நிலையில், சில எதிர்ப்புக்களும் உருவாகியுள்ளன.