ஆனால் சிறிதளவேனும் தர்மம் செய்யும் குணம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்படி தர்ம காரியங்களில் ஈடுபட்டால்தான் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.
உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 12-ம் வீட்டில் புதன் அமைய பெற்றால், நீங்கள் நிச்சயமாக தர்ம காரியங்களில் பொருளுதவி செய்யும் எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
குறிப்பாக 12-ம் வீட்டில் புதன் ஆட்சி பலமோ அல்லது உச்ச பலத்தில் இருந்தால், அல்லது வர்க்கோத்தம அம்சமாக இருந்தால், குறித்த ஜாதகத்தை உடையவர் இயற்கையாகவே தர்ம காரியங்களுக்கு பொருளுதவி செய்வார் என்று ஜோதிடம் மேலும் கூறுகிறது.
இந்த தர்ம காரியங்களில் எவர் ஒருவர் ஈடுபடுகிறாரோ அவர் தெய்வங்களின் அருளாட்சியை பெறுவார்.
அதேநேரம், ஜோதிடத்தில் 12-ம் வீடு மறைவு ஸ்தானம் ஆகும்.
இது மாத்திரமன்றி 3, 6, 8 ஆகிய வீடுகள், மறைவு பெற்ற வீடுகள் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.
அதே நேரம் மறைவு பெற்ற இடத்தில் புதன் இருந்தாலும், அந்த நபருக்கு தர்ம காரியங்கள் செய்யும் அளவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் புதன் பகவான் பொருளைக் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றும் ஜோதிட சாஸ்திரம் எடுத்துரைக்கிறது.
புதன் பலம் பெற்று அமைந்த ஜாதகர், சிறந்த பண்புகள் நிறைந்தவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலும் இருப்பார். நீங்கள் யார் ஒருவர் புதன் பலம் பெற்று இருப்பிர்களோ, நீங்கள் இயல்பாகவே தெய்வீக விஷயங்களில்
ஈடுபாடு உள்ளவர்களாகவே இருப்பீர்கள்.
12-ம் வீட்டில் புதன் இருந்து, அதுவும் பலம் பெற்றிருந்தால் அந்த நபர் தர்ம காரியங்கள் செய்து புகழ் சேர்ப்பார். அவருக்கு விஷ்ணு பெருமானின் முழுமையான அருள் எப்போதும் கிடைக்கும்.