பிரேசிலில் உள்ள பிரபல அருங்காட்சியகமொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகம் 200
ஆண்டுகள் பழமையானதாகும். அத்துடன் குறித்த அருங்காட்சியகத்தில் 20 மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெறுமதி மிக்க பழமையான பொருட்கள் அழிவடைந்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகத்தில் பிரேசிலின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப் பொருட்கள் உள்ளிட்ட 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீப்பரவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் குறித்த தீப் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.