கோடைக் காலத்தில் எத்தனைப் பானங்களைப் பருகினாலும், இயற்கையாகக் கிடைக்கும் இளநீரே உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
இளநீரைப் பருகினால் நாம் அதிக நன்மைகளைப் பெற முடியும். வயிற்றுப் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.
இளநீரில் குறைந்த அளவிலேயே கொழுப்பு இருப்பதால் அதனைப் பருகியவுடன், வயிறு நிறைந்து விடும். இதனால் அடிக்கடி பசி எடுக்காது. இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
அத்துடன் இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.